திங்கள், 11 நவம்பர், 2019

பொது சிவில் சட்டம் தொடர்பான 4 வழக்குகளை நவ.15ம் தேதி விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

Image
பொது சிவில் சட்டம் தொடர்பான 4 வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 15ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது. 
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு, நாடு முழுவதும் ஒரே விதமான சட்டத்தை கொண்டு வரலாம் என பரிந்துரைக்கிறது. எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பொது சிவில் சட்டம்  கொண்டு வரக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 வழக்குகள் வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
நீதி ஆணையம் அல்லது உயர்மட்டக்குழுவை நியமித்து 3 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டத்துக்கான வரைவு கொள்கையை உருவாக்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv