திங்கள், 11 நவம்பர், 2019

வாகனச் சோதனையின் போது போலீசார் தாக்கியதில் பெண் உயிரிழப்பு?

Image
விழுப்புரத்தில், வாகன சோதனையின்போது போலீசார் தாக்கியதில் பெண் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங் காத்தான் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த அய்யம்மாள், தனது மகன் செந்திலுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கச்சிராயபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், செந்திலை மறித்து, குடித்திருக்கிறாரா என சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு காவலர் செந்திலை தாக்கியதாகவும், அதில், செந்திலின் தாய் அய்யம்மாள் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 
பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அய்யம்மாள் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, காவலர் அடித்ததாலேயே அய்யம்மாள் இறந்து விட்டதாகக் கூறி, அவரின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

credit ns7.tv