
உச்சநீதிமன்றமே தங்களுடையது தான் என்பதால் நிச்சயமாக ராமர் கோயில் கட்டியே தீர்வோம் என உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முகுத் பிகாரி வெர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பக்ராய்ச் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும் என கூறினார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முகுத் பிகாரி வெர்மா, உச்சநீதிமன்றம், நீதித்துறை உள்பட இந்த நாடே தங்களுடையது தான் என்றபோது, கோயில் மட்டும் தங்களுக்கு சொந்தமில்லாமல் போகுமா எனக் கூறினார்.
நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பாஜக அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் பக்ராய்ச் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும் என கூறினார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முகுத் பிகாரி வெர்மா, உச்சநீதிமன்றம், நீதித்துறை உள்பட இந்த நாடே தங்களுடையது தான் என்றபோது, கோயில் மட்டும் தங்களுக்கு சொந்தமில்லாமல் போகுமா எனக் கூறினார்.
நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பாஜக அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.