புதன், 18 செப்டம்பர், 2019

மதுரை ரயில்வே கோட்டப் பணியில் 90% வடமாநிலத்தவர்கள் தேர்வு...!

Image
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்களே தேர்வாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு கடந்த ஆண்டு செப்-17ஆம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வில் தேர்ச்சியானவர்களில் அதிகளவில் வடமாநிலத்தவர்களும், கேரள மாநிலத்தவர்களும் தான் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 20க்கும் குறைவான தமிழர்களே தேர்வாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே தேர்வுகளிலும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், மதுரை கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி ஆகியுள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்தாதே காரணம் என ரயில்வே துறை தரப்பில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

credit ns7.tv