திங்கள், 16 செப்டம்பர், 2019

பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு!

Image
2000க்கும் அதிகமான முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. 
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் இந்தியர்கள் 21 பேர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடித்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுமாறு பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருவதாக வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது. 
சர்வதேச எல்லை பகுதிகளில் பல்வேறு தாக்குதல் நடந்து வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் மட்டுமே இந்தியா ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

credit ns7.tv