வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற ராணுவம் தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் வி.கே.சிங்

Image
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தனி திட்டம் உள்ளதாக மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே. சிங் தெரிவித்துள்ளார். 
ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற ராணுவம் தயாராக இருப்பதாகவும், அரசின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும்  ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்திருந்தார். இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதில் அளித்த அவர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில், அரசுக்கு தனி திட்டமும் வியூகமும் உள்ளதாகக் கூறினார். அதை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது தொடர்பான இவ்விரு கருத்துக்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

credit ns7.tv