சனி, 14 செப்டம்பர், 2019

சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரம்!

சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரத்தில் விரைந்து முடிவு எடுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொள்கை விதிகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதா என்பது குறித்து வரும் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அந்நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவதில் மத்திய அரசுக்கு ஆட்சேபம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
credit ns7.tv