ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பேனர் விவகாரத்தில் அதிரடி காட்டும் அதிகாரிகள்!

Image
சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கு பதிலாக, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடைகள் மீது வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்றியதால், வணிகர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திரையரங்கு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று காலை நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அவசர அவசரமாக அகற்றினர். சிறுசிறு கடைகள் மீது வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளையும் அகற்ற முற்பட்டதால், வணிகர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
ஒருநாள் அவகாசம் அளிக்குமாறு வணிகர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து, கடையிலுள்ள பெயர் பலகை பேனர்களை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர். 
credit ns7..tv