சனி, 21 செப்டம்பர், 2019

மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்...!


Image
இந்திய பொருளாதாரத்தின் யதார்த்த நிலையை வரிகுறைப்பு போன்ற நடவடிக்கையின் மூலம் மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன் கார்ப்ரேட் வரிகளை குறைத்து இந்திய பங்குச் சந்தைகளை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். 
மேலும் அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவழிப்பதன் மூலம் உலகின் அதிக பொருட்செலவில் நடைபெறும் நிகழ்ச்சி என்ற பெயரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 
ராகுல் காந்தி ட்வீட்
ஹவுடி மோடி போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளால், இந்தியாவின் பொருளாதார நிலையை மறைக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

credit ns7.tv