திங்கள், 30 செப்டம்பர், 2019

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை?

வயதான பெற்றோரை கைவிட்டால், பிள்ளைகளுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவுள்ளது.
பெற்றோர்களை முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகள் அவர்களை தவிக்க விடுவது அதிகரித்து வருகிறது. வயதான காலத்தில் கவனிக்க யாருமற்ற சூழலில் பெற்றோருக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அலுவலகம், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூகம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம் 2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் விதிக்கப்படும் சிறைத்தண்டனை 6 மாதமாக அதிகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. 

credit ns7.tv