புதன், 25 செப்டம்பர், 2019

சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி கைது..!

Image
முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவியை பண மோசடி வழக்கில் உத்திரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 
பாஜகவைச் சேர்ந்த சின்மயானந்த் நடத்தும் சட்டக்கல்லூரியில் பயின்று வந்த மாணவி, அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். தன்னை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார்.
மூக்கு கண்ணாடியில் கேமரா பொருத்தி எடுத்ததாக மாணவி கொடுத்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்மயானந்தை கைது செய்தனர். இந்நிலையில் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவி, மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த வழக்கு தொடர்பாக இந்த பெண் ஏற்கெனவே முன் ஜாமீன் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயானந்த் மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக 5 கோடி ரூபாய் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

credit ns7.tv