புதன், 18 செப்டம்பர், 2019

இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது - திருமாவளவன்

Image
இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசனின் 74வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் சிலைக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே மொழி, ஒரே ஆட்சி என தொடர்ந்து அமித்ஷா பேசி வருவது அரசியல் அமைப்பு சட்டத்தையே சீர்குலைக்கிறது என்று குற்றம்சாட்டினார். இந்தியை மட்டுமே தேசிய மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என அமித்ஷா துடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

credit ns7.tv