வியாழன், 12 செப்டம்பர், 2019

திருமணிமுத்தாறு நீரில் பொங்கிவரும் ரசாயன நுரை...!

Image
ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலந்து நுரைபோல் பொங்கி வரும் தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த  கிராமத்தின் வழியே செல்லும் திருமணிமுத்தாறு மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் ஆற்றில் ரசாயனம் கலந்த தண்ணீரை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீரில் பொங்கிய நுரை அதிகரித்து மல்லசமுத்திரம் - மதியம்பட்டி சாலையில் பரவியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ரசாயன நுரை விவசாய நிலங்களிலும் பரவியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் ரசாயன நீர் கலந்து குடிநீரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv

Related Posts:

  • சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். வந்தாச்சு வந்தாச்சு, சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். கருவியின் மொத்த விலை - Rs. 4,50,000/-எம்.என்.ஆர்.ஈ மூலம் அளிக்கப்படும் மத்திய அரசு… Read More
  • கண மலை முபட்டி 14/04/2015,  இரவு   12:22  முதல் 01: 47 வரை கண மலை ,   … Read More
  • Quran எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.(அல்குர்ஆன்: 13… Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More
  • இஸ்லாமிய பெண்கள் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையம் செல்ல தேவையில்லை...! கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் காவல்நிலையத்தில் தென்னூர் பகுதி பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக நீண்ட நேரம் குற்றவாளி போல காக்க… Read More