வெள்ளி, 27 செப்டம்பர், 2019

காஷ்மீர் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்..!

Image
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதுதொடர்பாக இந்திய அரசு உரிய முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறினார். 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உட்பட வேறு எந்த நாடும் தலையிட உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாட்டுடன், எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் ஜெய்சங்கர் அப்போது கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv