ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

மத்திய அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

Image
அவசர நிலையை விட, மோசமான நிலையில் தமிழகம் இருப்பதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழகத்தில் தற்போதுள்ள நிலை குறித்து அனைவரும் அறிந்திருப்பதாகவும், நீட், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களால், தமிழ்மொழியை சிதைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் குறை கூறியுள்ளார். ஒருபுறம் இந்தி திணிப்பு, மறு புறம் தமிழகத்தை காவிமயமாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும்,  இதில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதிலேயே அதிமுக குறியாக 
இருப்பதாகவும் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

credit ns7.tv