செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம்

credit ns7.tv
Image
பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஐ.நா அவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா உச்சிமாநாடு, நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, அதிகமான போதனைகளைவிட மிகச் சிறிய செயல் சிறந்தது என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 
இந்தியாவில், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தண்ணீரை சேமிப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார். 
இந்திய சுதந்திர தினத்தின்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, இவ்விஷயத்தில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு அதிகரிக்கும் என நம்புவதாகவும் கூறினார். 
நேற்றைய அமர்வில் பேசுவதற்கான தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் இல்லாத போதிலும், அவைக்கு வந்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்டுவிட்டு சென்றார்