சனி, 28 செப்டம்பர், 2019

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!


கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. 
இதனையடுத்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி கர்நாடகாவில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருந்த 15 தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. 
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்றும இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

credit ns7.tv