ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி உள்ளிட்டவற்றை தடுக்கும் முயற்சியாக அனைவரும், தங்களது ஆதார் கணக்குடன், பான் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரும் தங்களது பான் எண்களை ஆதாருடன் இணைத்து வருகின்றனர். அவ்வாறாக, இணைக்காதவர்கள் நடப்பு மாதமான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்துவிடவேண்டும் எனவும், அதுவே கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த காலக் கெடுவை தளர்த்தியுள்ள மத்திய நிதியமைச்சகம், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
credit ns7.tv