வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மாணவர்களால் சிறைபிடிப்பு..!


Image
கொல்கத்தா ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை, மாணவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் நேற்று ஏபிவிபி மாணவர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவை, இந்திய மாணவர் சங்கத்தினர் சிறைபிடித்தனர். கருப்புக் கொடியுடன் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் அமைச்சர் சுப்ரியோவால் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் அவரை தாக்குவதை போல் மாணவர்கள் சிலர் அத்துமீறினர். இது குறித்து பேசிய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மாணவர்களின் இப்போராட்டம் வருந்தத்தக்கது என பபுல் சுப்ரியோ கூறினார். 
பின்னர் விழா முடிந்து புறப்பட்ட சுப்ரியோவின் காரை மீண்டும் மாணவர்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த ஆளுநர் ஜெகதீப் தாங்கர், போலீசார் உதவியுடன் சுப்ரியோவை தமது காரில் அழைத்து சென்றார். 
credit ns7.tv

Related Posts:

  • குகை தோழர்கள் ::: அஸ்ஹாபுல் கஹ்ஃபு -  குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில்… Read More
  • Dubai police show off Ferrari DUBAI: Dubai police on Thursday showed off a new Ferrari they will use to patrol the city state, hot on the heels of a Lamborghini which joined the… Read More
  • Become Online Programmer ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம். புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவ… Read More
  • கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்று… Read More
  • Islam Read More