வியாழன், 26 செப்டம்பர், 2019

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி...!

Image
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள் சுபாஷினி. பார்வை குறைபாடு உடைய இவர் சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கியபடி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 
வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்ட சுபாஷினி, பாரா ஜூடோ போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடிய சுபாஷினி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
இதுஒருபுறமிருக்க வறுமையின் காரணமாக மாணவி சுபாஷினி காமன் வெல்த் போட்டியில் பங்கேற்பதில் எழுந்த சிக்கல் பற்றி  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழக அரசு உதவியுடன் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மாணவி சுபாஷினி தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv