புதன், 18 செப்டம்பர், 2019

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்திய சாய்னா!


Image
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் CHANGZHOU நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் சாய்னா நேவால், தாய்காந்தின் Busanan Ongbamrungphan எதிர்த்து விளையாடினார்.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக 44 நிமிடங்களில் 10-21, 17-21 என்ற நேரடி செட் கணக்கில் சாய்னா தாய்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இரண்டாவது முறையாக தாய்லாந்து வீராங்கனையிடம் சாய்னா வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி மூலம் முதல் சுற்றிலேயே சாய்னா வெளியேறியுள்ளது இந்திய பேட்மிண்டன் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இதனிடையே மற்றொரு முன்னணி வீராங்கனையும் உலக சாம்பியனாக வலம் வரும் பி.வி.சிந்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் Li Xuerui-ஐ முதல் சுற்றில் எதிர்கொள்கிறார். இந்த தடையை தாண்டிவிட்டால் காலிறுதி வரை சுலபமாக சிந்து கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காலிறுதியில் சிந்து சவால்மிகுந்த சீன வீராங்கனை Chen Yufei-ஐ எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆடவருக்கான முதல் சுற்றில் தாய்லாந்து வீரர்  Suppanyu Avihingsanon-ஐ 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் சாய் பிரனீத் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

credit ns7.tv