வெள்ளி, 27 செப்டம்பர், 2019

புனேவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலி..!

Image
புனேவில் பெய்த கனமழையால் 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையே, அர்னேஷ்வர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கனமழைக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்,  மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.  

credit ns7.tv