ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கீழடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

Image
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்திடும் வகையில், அங்கு சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, தொல்லியல்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார். 
கீழடியில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான களக்கணிப்புகள், தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டு பழமையானதாக கருதச் செய்வதாகவும், அதன்மூலம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற, இளம் தொழில்முனைவோர் மையத்தின், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக முழு வலிமையுடன், தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும், என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கீழடியில் தமிழக அரசு அளித்துள்ள ஒரு ஏக்கர் நிலத்தில், உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும், எனவும் அமைச்சர்  பாண்டியராஜன் கூறினார். 

credit ns7.tv