திங்கள், 9 செப்டம்பர், 2019

தஹில் ரமணியை மேகாலய நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலய  நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய கொலிஜியம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய கோரிய தஹில் ரமணியின் கடிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அது குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருந்தார். 
மேலும், அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம், தலைமை நீதிபதி தஹில் ரமணி விடுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்தது. மேலும் அவரது அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த 75 வழக்குகள், நீதிபதி வினித் கோத்தாரி அடங்கிய இரண்டாவது அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தது. 

credit ns7.tv