புதன், 11 செப்டம்பர், 2019

பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி வைகோ சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு...!

Image
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வரும் 15-ம் தேதி சென்னையில் மதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனவே அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv