வியாழன், 31 அக்டோபர், 2019

உருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

அரபி கடலில் உருவாகியுள்ள மகா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  அரபி கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  மகா புயல் திருவனந்தபுரத்தில்...

5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு

5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  வரும் 2020ம் ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவில் 32 மாவட்டத்துக்கும் தனித்தனி தேர்வுக்குழுவை அமைத்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான 8 பேர்...

இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனம்..!

2050ம் ஆண்டுக்குள் வெள்ளத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடத்திய ஆய்வு ஒன்றில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா, சீனா, வியட்நாம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 6 ஆசிய நாடுகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால்...

சுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கேள்விகள்!

கோபத்தின் உச்சியில் இருக்கும் மக்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனச்சாட்சியுடன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 25ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றினுள் விழுந்து சிக்கிக்கொண்டான். 5 நாட்கள் நடைபெற்ற...

இரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...!

நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த ஜம்மு- காஷ்மீர் நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது.  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்தநாளான...

செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தார்.  அங்கு வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருவதால், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த...

விளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு!

விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிக்கப்படுப்படுவதாக, இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.  மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிகளை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ...

தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த, சுஜித் வில்சன் எனும் 2 வயது குழந்தை கடந்த அக்டோபர் 25ம் தேதி வெள்ளியன்று தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான். பின்னர் குழந்தையின் பெற்றோர் தேடியபோது, சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றினுள் விழுந்தது தெரியவந்தது. முதலில் பத்து அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித்,...

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீரில் ஆய்வு...!

credit ns7.tv இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீர் சென்று இன்று  பார்வையிடவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக...

உயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உயிருக்கு போராடுவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார். மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று Kot Lakhpat சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே...

இந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது - தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம்

இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாக, தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாடத்திட்டங்களை எளிமையாக்குதல் மற்றும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்ட பிறகும், தேர்வு முடிவு வெளியாகும் போது சில மாணவர்கள்...

திங்கள், 28 அக்டோபர், 2019

அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.   ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தன. அதன்பேரில், தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்பு குழுக்களை அமைத்து அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த 9...

தேர்தல் நடத்தை விதிகளில் சட்டத்துறை திருத்தம்!

தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டுமே தற்போது தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும்...

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வராவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பின்...

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!

சென்னையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக பணியில் உள்ள பிற பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  இந்தப்...

குழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடக்கம்!

credit ns7.tv ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்து வரும் குழந்தை சுஜித்தை மீட்க, ராட்சத இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்படி கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் மாலையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை...

சனி, 26 அக்டோபர், 2019

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!

ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ➤2009 பிப்ரவரி 22-ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிந்தான்.  ➤அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம்...

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை; 14 மணி நேரமாக போராடும் மீட்புக்குழுவினர்...!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது மகன் சுஜித் வின்சென் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு இருந்ததை அறியாத குழந்தை அதில் தவறி விழுந்தது. குழந்தையின்...

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்!

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் 2010ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர்த் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது....

ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி...!

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் தான், இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடைபெற்று தமிழர்களின் பெருமை உலக அரங்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து தான்,  சிந்து சமவெளியை...

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளனர் - உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு(2019) இதுவரை முடிந்துள்ள பருவமழை காலத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 26 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெள்ளம் மற்றும் மழை சம்பந்தப்பட்ட காரணங்களால் 2155 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும்...

வெள்ளி, 25 அக்டோபர், 2019

மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், சீனப் பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும் சமூக வலைத்தளங்களில்...

யார் இந்த துஷ்யந்த் சவுதாலா?

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணிசமான தொகுதிகளை வென்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனமும் திசை திரும்பியிருக்கிறது. இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 90...