திங்கள், 10 செப்டம்பர், 2018

​பாலியல் புகாரில் சிக்கிய மார்க்ஸிஸ்ட் கட்சி எம்.எல்ஏவை பாதுகாக்கிறதா மாநில மகளிர் ஆணையம்?

Image

கேரளாவில் ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதான அதே கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் தேசிய தலைமைக்கு புகார் மனு அனுப்பிய சம்பவம் கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் வகையிலாக மாநில மகளிர் ஆணையத் தலைவி கருத்து கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோர்னூர் தொகுதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான பி.கே.சசி, மனார்காட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தொடர்ந்து தொலைபேசியில் பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும் அக்கட்சியின் இளைஞர் அணியான DYFI-ஐ சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் கட்சியின் மாநில தலைவரான கொடியேரி பாலக்கிருஷ்ணனுக்கும், பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்துக்கும், பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் கடந்த மாத இறுதியில் இ-மெயில் மூலம் புகார் அளித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை தேசிய தலைமை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி எம்.சி.ஜோசப்பீன் கூறும்போது, “நாமெல்லாம் மனிதர்கள், தவறுகள் நடக்கக்தான் செய்யும், கட்சிக்குள் இருப்பவர்களும் இதே போன்ற தவறை செய்திருப்பார்கள்” என்றார்.

எனினும். இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும், தாங்களாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றாலும் இப்புகார் குறித்த சில தகவல்கள் தேவைப்படுகின்றன, இதனை பாதிக்கப்பட்ட பெண்ணோ, ஊடகங்களோ கூட வெளியிடவில்லை, பிறகு எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார் ஜோசப்பீன். மேலும் கட்சி தொடங்கியதிலிருந்தே இது போன்ற விவகாரங்களை அக்கட்சி கையாண்டிருக்கும், இது ஒன்றும் புதிதல்ல இந்த விவகாரத்தில் அவர்களாகவே முடிவெடுப்பார்கள் என்று கூறி முடித்தார்.

இருப்பினும், தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது, இது குறித்து விசாரிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கேரள போலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts:

  • கடல் ஆராய்ச்சி. இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்… Read More
  • சவுதி அரசர் வழங்கும் சலுகை அனைத்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்...சவுதி அரசர் வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்...தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜ… Read More
  • Indian Wifi Train இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கா… Read More
  • News in Drops Read More
  • 16 குண்டுவெடிப்புக ளை பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!! இந்தியாவில் இதுவரை நடைபெற… Read More