புதன், 8 ஜூலை, 2020

கொரோனா தொற்று பரவல் - மதரீதியாக பொய் தகவல்களை பரப்பிய 356 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மதரீதியாக பொய் தகவல்களை பரப்பியதாக தமிழகம் முழுவதும் 356 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத ரீதியான பொய் தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி. சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தொற்றுடன் மதத்தை சம்மந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் பொய் தகவல் வெளியிட்டதாக, சென்னையில் 8 பேர் மீது 8 வழக்குகளும், மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக  86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.