ஞாயிறு, 3 மார்ச், 2019

வீடுகளுக்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடியவன் சிசிடிவி மூலம் பிடிபட்டான்! March 02, 2019

Image
சென்னையில் வீடு புகுந்து 100 சிலிண்டருக்கு மேல் திருடிய திருடனை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர், அசோக் நகர், வளசரவாக்கம், போரூர் பகுதிகளில், வீடுகளில் சிலிண்டர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக புகார் வந்தது. கேபிள் ஆபேரேட்டரை போல வந்த நபர், வீட்டில் இருபவர்களின் கவனத்தை திசை திருப்பி, சிலிண்டர்களை திருடிச் சென்றதாக பல புகார்கள் வந்தன. 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார், சிலிண்டர்களை தொடர்ச்சியாக திருடிச் சென்ற நபரை பிடிப்பதற்கு, தனிப்படை அமைத்தனர். இந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பார்த்தபோது, சிலிண்டர்களுடன் மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய காட்சிகள் பதிவாகியிருந்தது. 
இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், புதுச்சேரியை சேர்ந்த அஷோக் குமார் என்பவரை, கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், போலீசார் பறிமுதல் செய்தனர். 

source: ns7.tv