புதன், 6 மார்ச், 2019

பாகிஸ்தானில் 16 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை! March 05, 2019

Image
பாகிஸ்தானில் 16 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 
அவற்றில் 11 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வருவதாகவும், அங்கு மிகக்கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 முகாம்களில் 3 முகாம்கள் பாகிஸ்தானின் மான்செரா பகுதியிலும், 2 முகாம்கள் பஞசாப் மாகாணத்திலும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்குள்ள தீவிரவாதிகளுக்கு நீருக்கடிலிருந்து தாக்கும் திறன், ட்ரோன்களை இயக்கும் ஆற்றல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 560 தீவிரவாதிகள் இந்த முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick/5/3/2019/16-terrorist-camps-are-operating-pakistan-wars