சனி, 2 மார்ச், 2019

வரும் 13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! March 02, 2019

Image
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி தமிழகம் வர உள்ளார். 
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கூட்டணி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஏதுவாக, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகத்துக்கு வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க, கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி தமிழகத்துக்கு வர உள்ளார் என தெரிவித்தார். ராகுல் காந்தி, எந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்

source: ns7.tv