வியாழன், 7 நவம்பர், 2019

அயோத்தி விவகாரத்தில் உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது- பிரதமர் மோடி

Image
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளை யாரும் தெரிவிக்ககூடாது என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. நாட்டில் அமைதியை பேண வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு என்று அமைச்சர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அயோத்தி வழக்கில் இந்த மாதம் 17-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
credit ns7.tv