வியாழன், 7 நவம்பர், 2019

ஜாமீனுக்காக பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயார் - ப.சிதம்பரம் தரப்பு வாதம்..

Image
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள ப.சிதம்பரம், தமது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளார். 
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீனில் வெளியே வந்தால் சிதம்பரம் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என்றும், அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் வாதாடினார். இன்று நடைபெற உள்ள விசாரணையில், அமலாக்கப்பிரிவு வாதம் நடைபெறுகிறது.

credit ns7.tv