ஞாயிறு, 6 அக்டோபர், 2019

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து கேரளா திட்டவட்டம்!

credit ns7.tv
Image
மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக மத்திய அரசு அறிவித்த பின்னர்தான் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது குறித்து காணொலிக் காட்சி மூலம் *மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் காபா தலைமையில் தமிழ்நாடு மாநில தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்காணி, கேரள மாநில தலைமைச் செயலாளர், கேரள சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் நியுட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குனர் விவேக் தாதர் ஆகியோர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்திற்கான மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை டாடா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018ஆண்டே பெற்றிருந்தாலும், வனவுயிர் வாரிய அனுமதியும் அவசியமாகும். இந்த அனுமதியை கோரி தமிழக அரசிடம் டாடா நிறுவனம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தது. இந்த திட்டம் அமையவுள்ள 66ஏக்கர் பரப்பளவின் எல்லையானது கேரள மாநிலத்தில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் எல்லையிலிருந்து 4.9கி.மீ தூரத்திற்குள்ளாக இருப்பதால் கேரள அரசின் ஒப்புதலும் அவசியம் எனும் அடிப்படையில், கேரள அரசிடம் தமிழக அரசு இத்திட்டத்திற்கான வனவுயிர் வாரிய அனுமதி வழங்குவது குறித்த கருத்தைக் கேட்டிருந்தது. 
இந்த நிலையில், நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கேரள அரசு தலைமைச் செயலாளர் "மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சுற்றுச்சூழல் முக்கியம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஏற்கெனவே வரைவு திட்ட அறிக்கையை நாங்கள் மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளோம் அதனடிப்படையில் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவித்த பின்னரே நியூட்ரினோ திட்டம் குறித்த கேரள அரசின் கருத்தை தெரிவிக்க முடியும்" எனக் கூறினார்.
பின்னர் பேசிய தமிழக அரசு தலைமைச் செயலாளர் "கேரள அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுத்த பின்னரே தங்களால் இத்திட்டத்திற்கான வனவுயிர் வாரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.

Related Posts:

  • #ஊடகபயங்கரவாதிகள் பேரதிர்ச்சியான செய்தி கசிந்தது. இந்தியா மற்றும் உலகில் மூளை முடுக்குகளில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர்கள் யார்? யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? … Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 67.1067797671 0.0149016… Read More
  • ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!! நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான்… Read More
  • பலவகை ஆக்கிரமிப்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலமென்பது சற்றேறக்குறைய 12000 ஏக்கர் பரப்பு கொண்டது. அது பலவகை ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு தற்போது வெறும் 1470 ஏக்கர் என்ற… Read More
  • மீலாது விழா' அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!! ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!! இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த '… Read More