செவ்வாய், 5 நவம்பர், 2019

செய்திகளை வரைமுறைப்படுத்த தனி அமைப்பை உருவாக்க முடிவு!

Image
செய்திகளை வரைமுறைப்படுத்துவது மற்றும் ஊடகத்துறையை நிர்வகிப்பது தொடர்பாக தனி அமைப்பை உருவாக்க செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 
செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மற்றும் மாநில அளவிலான 30க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் செய்திகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரத்யேக குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் உள்ள தொலைக்காட்சி பிரதிநிதிகளை கொண்டு இந்த குழு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கூட்டமைப்பின் தலைமையகம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
credit ns7.tv