புதன், 4 டிசம்பர், 2019

100 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?

Image
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவின் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையால் தனித்தனியாக கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 100 நாட்களைக் கடந்து திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

credit ns7.tv