புதன், 4 டிசம்பர், 2019

விஜயகாந்த் மீதான வழக்குகளை முடித்து வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

Image
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றதையடுத்து, இரண்டு வழக்குகளை முடித்து வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும், விமர்சனம் செய்ததாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 
இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான அரசாணையை அரசு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2013, 2014ம் ஆண்டுகளில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை மட்டும் முடித்து வைப்பதாக கூறினார். மற்ற 3 வழக்குகளின் மீதான விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

credit ns7.tv