வெள்ளி, 6 டிசம்பர், 2019

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!


Image
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்வதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
தமது மக்களவை தொகுதியான வயநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்தார். 
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்வதாக சாடிய ராகுல் காந்தி, இருவரும் வெளியுலக தொடர்பு அற்றவர்களாக இருப்பதாகவும் விமர்சித்தார். மோடியும், அமித்ஷாவும் பகல் கனவு காண்பதால் தான் நாடு கடும் சிக்கலில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

credit ns7.tv