திங்கள், 2 டிசம்பர், 2019

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்மழை: எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Image
கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பாதிப்பிற்கு ஏற்ப, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக புதுவையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல, புதுக்கோட்டையிலும் ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

credit ns7.tv