வியாழன், 2 ஜூலை, 2020

சிபிசிஐடி அலுவலகத்தில் கைரேகை பதிவு!


கயத்தாறு அருகே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடார்ந்து, அதிகாலையில் எஸ் ஐ பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேரும் கைது  செய்யப்பட்டனர்.

ஏற்கனவே நேற்று இரவு எஸ் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட நான்கு பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். பின்பு சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தற்போது தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 4 பேருக்கு கைரேகை பதிவு நடைப்பெற்று வருகிறது. 


எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசுக்கு நன்றி என சிபிசிஐடி ஐஜி  சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய காவல் அதிகாரிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.