செவ்வாய், 3 டிசம்பர், 2019

உள்ளாட்சி தேர்தலில் பல குழப்பங்கள் உள்ளது : கனிமொழி

Image
உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட அவர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகளோ, அமைச்சர்களோ சந்திக்கவில்லை என குற்றம் சாட்டினார். உள்ளாட்சி தேர்தலில் பல குழப்பங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், அதனை சரி செய்து விட்டு தேர்தலை அறிவித்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

credit ns7.tv