Home »
» பிரிவினைவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும்: தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை..! June 08, 2019
நாட்டை பிரிவினைக்குள்ளாக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திறந்த வாகனத்தில் சென்ற ராகுல்காந்தி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மையத்திற்கு வந்த ராகுல் காந்தி, தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் கல்பேட்டா பகுதியில் திறந்த வேனில் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டின் பிரிவினைக்குள்ளாக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் நாட்டு மக்களிடையே பொய் பிரச்சாரம் மேற்கொண்டுதான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினார்.
Related Posts:
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்! November 12, 2018
சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 90 தொகுதிக… Read More
சர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா? November 11, 2018
சர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல் விதிமுறைகளில் உள்ள 49-பி பிரிவை பயன்படுத்தி தன… Read More
புத்தகப்பையோடு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்! November 12, 2018
ஜார்கண்ட்டில் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில், பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் புத்தகப் பையோடு, வில் - அம்பையும் … Read More
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியது : ரகுராம் ராஜன் November 11, 2018
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்… Read More
ரெட் அலர்ட் எப்போது விடுக்கப்படுகிறது? November 11, 2018
தமிழகத்திற்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 15ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகம… Read More