வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

தொடர் மழையால், திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு....! August 09, 2019

credit Ns7.tv
Image
கோவையில், கடந்த இரண்டு நாட்களாக கொட்டி வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அங்கு விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொய்யலை ஒட்டியுள்ள பேரூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், ஆண்டிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஓடையிலிருந்து வெளியேறும் தண்ணீரால், சிங்காநல்லூர் - வெள்ளூர் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. ஆத்துப்பாலம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.