வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சென்னை BSNL அலுவலகத்தில் திடீர் தீ விபத்து...! August 02, 2019

ns7.tv
Image
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான  பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்த விபத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திநகர், பூக்கடை, மாதவரம், புளியந்தோப்பு, அண்ணாநகர், பரங்கிமலை ஆகிய காவல் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் புகார் அளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 
இன்னும் சில தினங்களில் தொலைபேசி இணைப்புகள் சரிசெய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் காவல்துறையின் அவசர அழைப்பு எண்ணான 100, தீயணைப்புத்துறை எண்ணான 101 ஆகியவை மட்டும் செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.