ஞாயிறு, 7 ஜூலை, 2019

புதுச்சேரி திட்டக்குழு கூட்டம்: முதல்வர் வெளிநடப்பு! July 06, 2019

credit ns7.tv
Image
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்திலிருந்து, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
புதுச்சேரியில் 2019 - 2020-ம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஆதாரம், துறை வாரியாக பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக, மாநில திட்டக்குழு கூட்டம், அதன் தலைவரான ஆளுநர் கிரண்பேடி தலைமையில் இன்று நடைபெற்றது. 
இதில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோதே, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, திட்டக்குழு கூட்டத்திற்கு அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததை கண்டித்து, வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். 
முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த ஆளுநர் கிரண்பேடி, தனது தரப்பு நியாயத்தையும் ஊடகத்திடம் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, எதிர்க்கட்சி சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டுமென்ற கோப்பை, தலைமை செயலாளர் மற்றும் திட்டக்குழு செயலாளருக்கு அனுப்பிவிட்டதாகவும், அவர்கள் தான் அந்த கோப்பை பார்க்கவில்லை, என அதிகாரிகள் மீது குற்றம்ச்சாட்டினார். மேலும், அடுத்த சனிக்கிழமை விதிமுறைகளின்படி, மீண்டும் திட்டக்குழு கூட்டம் நடைபெறும், என தெரிவித்தார்

Related Posts:

  • ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு மவ்ளுது அபிமானிகளே - மவ்ளுது பாடல்களுக்கு குரான் மற்றும் ஹதிஸ்களில் இருந்து ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். TNTJ - முபட்டி கி… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்… Read More
  • அறியாமல் இருப்பது தான் தவறு.. சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க!உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?காலாவதியான ச… Read More
  • அமைதி பூங்கா அமைதி பூங்கா தமிழகத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடலை மனித வெடிகுண்டின் மூலம் துண்டு துண்டாக்கி மண்ணில் வீசிய கொடூர கொலையாளிகள் மூவரின் மரண தண… Read More
  • காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்! http://goo.gl/yySZL3காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோ… Read More