ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் மீட்பு....! August 04, 2019

ஈரோடு மாவட்டம் பட்லூர் காவிரியாற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 
ஆடி 18ம் நாள் விழாவையொட்டி, பட்லூர் காவிரியாற்றில் குளிக்க சென்ற ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி, அவரது 9 வயது மகன் கிருஷ்ணன் ஆகியோர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இதனை கண்ட தீயணைப்பு துறையினர் உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டுள்ளனர். சிறுவன் கிருஷ்ணனுக்கு, முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர், தக்கசமயத்தில் வாயோடுவாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றினார். 
தொடர்ந்து இருவரையும் தீயணைப்பு வாகனத்தில் அழைத்து சென்று மருத்துவனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் தன்னலமற்ற உழைப்பையும், தியாகத்தையும் பாராட்டினர்.  
credit ns7.tv