ஞாயிறு, 1 ஜூலை, 2018

காவிரி விவகாரம்: கர்நாடகத்தின் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் தீர்மானம்! July 1, 2018

காவிரி விவகாரத்தில் ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. 

இதில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் பங்கேற்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Image