புதன், 10 ஏப்ரல், 2019

பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்துமா ரபேல் முறைகேடு வழக்கு? April 10, 2019

Image
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 
ரபேல் போர் விமான ஒப்பந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்த வழக்கில் ரபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது. 
இதனை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஜோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

source : ns7.tv