புதன், 1 ஆகஸ்ட், 2018

குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த தறித் தொழிலாளியின் மகன்! August 1, 2018

Image


சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த பிரபுதேவா என்பவர் குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தறித் தொழிலாளியான வைரவேலுவின் மகனான பிரபுதேவா, பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற்ற டிஎன்பிசி குருப் 4 தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாநிலத்தில் முதலிடம் பிடித்து பிரபுதேவா தேர்வாகியுள்ளார். 

சுமார் 17 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதிய நிலையில், பிரபுதேவா முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்