வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி அதிரடி கைது! August 9, 2018

Image

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி வந்திறங்கினார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்தனர். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசியதற்கு பழிவாங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய தேசத் துரோக வழக்குகளின் கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமுருகன் காந்தியை தமிழகம் அழைத்து வர, தமிழக போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்