Home »
» பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி அதிரடி கைது! August 9, 2018
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி வந்திறங்கினார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்தனர். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசியதற்கு பழிவாங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய தேசத் துரோக வழக்குகளின் கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருமுருகன் காந்தியை தமிழகம் அழைத்து வர, தமிழக போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்
Related Posts:
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தமிழக அரசு விளக்கம்! December 21, 2018
source: ns7.tv
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரும் 1ம் தேதி அமலாகும் நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு… Read More
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரும் 1ம் தேதி அமலாகும் நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தது. அதன் படி வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தீன் பைகள், கப், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகிய மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்னும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ உபகரணங்களை பேக் செய்ய பயன்படும் பிளாஸ்டிக், மக்கும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தடைக்கான விதியை மீறினால் மக்களுக்கு என்ன தண்டனை என்று அரசு இன்னும் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. தண்டனையை பற்றி தெளிவு இல்லாததால் தடையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, தடையை மீறுவோருக்கான அபராதம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source: ns7.tv
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக … Read More
நாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக மாறுவார்களா நெட்டிசன்கள்? December 21, 2018
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பதை சமூக வலைதளங்களே தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் ந… Read More
கடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற தமிழ்நாடு! December 20, 2018
இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களை ஆண்டுதோறும்… Read More
நாட்டின் எந்த கணினி தகவல்களையும் உளவு பார்க்க CBI உள்ளிட்ட 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அனுமதி! December 21, 2018
நாட்டில் உள்ள எந்த ஒரு கணினித் தகவல்களையும் கண்காணிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு முகமை முதல் சிபிஐ வரையிலான நாட்டின் 10 மத்திய அமைப்புகளுக்கு ம… Read More